×
 

அடுத்தடுத்து பதற்றம்... துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமைச் செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...!

துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இமெயில் மூலமும் செல்போன் அழைப்புகள் மூலமும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், முக்கிய வணிக வளாகங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரது வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், என பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சமீபத்தில் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை செல்போன் எண்ணை கொண்டு போலீசார் கைது செய்தனர். டிபிஐ அலுவலகம், சென்னை உயர்நீதிமன்றம், வானிலை ஆய்வு மையம் என பல இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகின்றன. 

இந்த சம்பவங்களுக்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டன் பின்னி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்பநாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: சென்னையில் பரபரப்பு..!! மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!! ஹைஅலர்ட்டில் வெளிநாட்டு தூதரகங்கள்..!!

மேலும் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை ஆர் ஏ புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இறுதியாக இந்த இரண்டு வெடிகுண்டு மிரட்டல்களும் புரளி என்பது தெரிய வந்தது. 

இதையும் படிங்க: BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share