தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!
திண்டுக்கல்லில் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் நடிகர் எஸ்வி சேகர் பங்கேற்க இருந்த திருமண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் கோவிலில் வைத்து மணமகன் தாலி கட்டிய நிலையில், போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் - கரூர் சாலையில் வேலு திருமண மஹால் உள்ளது. இங்கு வேடசந்தூரை சேர்ந்த மணமகன் சரண்குமாருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கௌசல்யாவிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு திருமண பத்திரிகைகள் உறவினர்கள் நண்பர்களுக்கு என வழங்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இன்று கல்யாணத்திற்கு இரு வீட்டாரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் வருகை தந்தனர். இந்த நிலையில் திருமண வீட்டாருக்கு போன் கால் வந்ததாக கூறப்படுகிறது. அந்த திருமண மண்டபத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாகர்கோவிலில் துணிகரம்... 137 சவரன் நகையை ஆட்டையை போட்ட பலே கில்லாடிகள் !! துருவி துருவி விசாரணை..!!
இதனால் திருமணம் மண்டபத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து மண்டபத்தை காலி செய்த திருமண வீட்டார்கள் மண்டபத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணத்தை எளிய முறையில் நடத்தி முடித்துள்ளனர். இதை தொடர்ந்து உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் திருமண மண்டபத்தை அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என தெரியவந்தது. இதனையடுத்து திருமண வீட்டார் பெரும் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருமணத்திற்கு பிரபல நடிகரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன எஸ்வி சேகர் வருகை தர இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!