×
 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரத்தக்களறி... 17 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை... முதல் மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்ட பயங்கரம்...!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகப் பிரசித்திப் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருடத்தின் அனைத்து நாட்களுமே லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்காக கோவில் அருகிலேயே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரையைச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அமைந்துள்ளது. 

இந்நிலையில் அதிகாலை வாகன நிறுத்துமிடத்தின் முதல் தளத்தில் தூக்கிக் கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக வெட்டி கீழே வீசிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். 

அப்போது கொலை செய்யப்பட்டது 17 வயதான குப்பை என்கிற குபேந்திரன் என்பது தெரிய வந்தது. இந்த சிறுவன் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பழி வாங்கும் நோக்கத்துடன் யாராவது கொன்றார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்து விசாரித்து வரும் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

இதையும் படிங்க: காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share