×
 

7 நாட்களாக தண்ணி காட்டும் புஸ்ஸி ஆனந்த்... திணறும் தனிப்படை...!

கடந்த ஏழு நாட்களாக தமிழக வெற்றிக்கழக மாநில செயலாளர் ஆனந்த் தலைமுறைவாகி இருப்பதால் அவரைப் பிடிக்க போலீசார் திணறி வருவதாக கூறப்பட்டுள்ளது

கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: விஜய் பிரச்சாரத்தில் புகுந்த ரவுடிகள்... சதிதான்...! நீதிமன்றத்தில் காரசார விவாதம்

புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது. கரூர் சம்பவம் நடந்த மறுநாளே புஸ்ஸி ஆனந்த் தலைமுறைவாகி இருப்பதாகவும், அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாகவும், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றதாகவும் தகவல் வெளியானது. கடந்த ஏழு நாட்களாக அவர் வெளியில் வராத நிலையில், முன்ஜாமினும் கிடைக்கவில்லை. போலீசாருக்கு ஏழு நாட்களாக ஆனந்த் தண்ணி காட்டி வரும் நிலையில் அவரைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெங்களூருவில் பதுங்கிய புஸ்ஸி ஆனந்த்? விரைந்தது தனிப்படை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share