சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளில் ஒன்றாக, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி வரும் ஜூன் 29-ம் தேதியிலிருந்து ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த சி.விஜயபாஸ்கர், சமீபத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த சூழலில், அவர் தவெகவில் இணையும் வாய்ப்புகள் பலமாக எழுந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் தனக்கு வலுவான ஆதரவு தளம் கொண்ட அவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தவெகவில் இணைய தயாராகி வந்தார்.
முதலில் ஜூன் 29-ம் தேதி சென்னை திருவான்மியூர் அல்லது நீலாங்கரை பகுதியில் உள்ள ஆர்.கே. கான்வென்ஷன் சென்டர் போன்ற இடத்தில் பிரம்மாண்டமான இணைப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் பங்கேற்பார் எனவும், புதுக்கோட்டை மற்றும் கரூர் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தருவார்கள் எனவும் தகவல்கள் பரவின. சமையல் ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளும் முழு வீச்சில் நடைபெற்றன.
இதையும் படிங்க: "கஞ்சாவுக்கு ஓட்டம்... டாஸ்மாக்குக்கு மௌனமா? CM விஜயை கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!!
எனினும், தமிழ்நாடு அரசு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் ஆண்டு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து தடைகள் உள்ளிட்ட காரணங்களால் பிரம்மாண்ட இணைப்பு விழாவை அதே தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை ஜூலை 2-ம் தேதி (வியாழக்கிழமை) வேறொரு மண்டபத்தில் நடத்த தவெக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: எ.வ.வேலு நல்ல ஆதாரத்தோடு சிக்கியிருக்கிறார்!! துணிச்சலோடு எதிர்கொள்ளட்டும்! அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!