×
 

தேர்தல் விதிமீறல்... அமைச்சர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு... அதிரடி நடவடிக்கை..!!

தேர்தல் விதிமீறியதாக அமைச்சர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் விதிமுறையை மீறி பட்டாசு வெடித்து பேரணியாக சென்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அமைச்சர் துரைமுருகன் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரைமுருகன் நேற்று ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேரணியாக சென்று சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். 

ஆனால் கேட்ட அனுமதிக்கு மாறாகவும், அளிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு மாறாகவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தும் சுமார் அரை மணி நேரம் ஊர்வலமாக சென்று போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கிய அனுமதியை மீறி செயல்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல் நிலையத்தில் வேட்பாளர் துரைமுருகன், கதிர ஆனந்த் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

துரைமுருகன், கதிர் ஆனந்த், சுனில் குமார், திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, டீக்காராமன் (காங்கிரஸ்), தணிகாசலம் (ஒன்றிய செயலாளர்) புஷ்பலதா வன்னியராஜா (மண்டல தலைவர்), வேல்முருகன் (ஒன்றிய பெருந்தலைவர்) மேற்கண்ட எட்டு பேரின் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share