×
 

ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் அயனாவரம் பகுதியில் நடைபெற்றது.

தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொது செயலரான ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று அயனாவரத்தில் தெருமுனை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது, பெண் தொண்டர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் உடைந்த கண்ணாடித் துண்டுகளுடன் மதுபாட்டில் விழுந்தது.

இதில் அயனாவரத்தைச் சேர்ந்த 45 வயதான பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடனடியாக ஆத்திரம் அடைந்தனர். இந்தத் திடீர் சம்பவத்தால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். ஆதவ் அர்ஜுனா மேடையில் நின்றபடியே கண்டனம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!

வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில், என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விளக்கமளித்து உள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள லாட்ஜில் மதுபோதையில் இருந்த ரித்திக் மற்றும் அப்புகுட்டி ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபாட்டில் வீசிகொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்ததாகவும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share