×
 

சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!

சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், முன்னறிவிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்ட சொத்து வரி உயர்வை நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் கண்டனத்தை அடுத்து, முன்னறிவிப்பின்றி பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரியை நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 30 முதல் 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை திருவொற்றியூரில் 295 ரூபாய் சொத்து வரி கட்டியவர்களுக்கு, இம்முறை 3,255 ரூபாயும், மாதவரத்தில் 295 ரூபாய் கட்டியவர்களுக்கு 1,000 ரூபாயும், முகப்பேரில் 6,500 ரூபாய் கட்டியவர்களுக்கு 31,000 ரூபாயும் சொத்து வரி கட்டச் சொல்லி குறுந்தகவல் வந்துள்ளது.

பலருக்கு 10 மடங்கிற்கும் மேலாக சொத்து வரி உயர்த்தப்பட்டதும், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் சிலருக்கு மட்டும் வரி உயர்த்தப்பட்டதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

சொத்து வரி உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். சொத்து வரி விதிப்பில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள், சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் “735 ரூபாய் கட்டி இருந்தது வரி 1,840 ரூபாய் ஆச்சு. 1,840 ரூபாய் கட்டியிருந்தால் ஐந்து வருடமாக இருந்திருக்கும். இப்போது திடீரென்று 6,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கிறது. எவ்வளவு வித்தியாசம் சார்? ஒரேடியாக, ஒரு சாதாரண எனக்கு, எங்களுக்கு 450 சதுர அடிக்கு இவ்வளவு வித்தியாசம் வரும்போது, 5,000, 10,000 சதுர அடி வைத்திருப்பவர்களின் கதி என்ன ஆகும்? அவர்களிடம் வருமானம் இருந்தால் சரி. எங்களைப் போன்றவர்கள் பென்ஷன் வாங்கி 6,000 ரூபாய் பென்ஷனில் 6,000 ரூபாய் வரி கட்ட முடியுமா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

“நிறைய இடங்களில் 50 சதவீதம், 100 சதவீதம், 200 சதவீதம், நான் பார்த்தது 300 சதவீதம் கூட ஏற்றி இருக்கிறார்கள். அது ஒரு அனௌன்ஸ்மென்ட்டும் இல்லை, ஒரு நோட்டீஸும் இல்லை. எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்றால், இது என்ன, திடீரென்று என்று சொல்கிறார்கள். ஒரு நார்மலைசேஷன் இல்லையே. எல்லாருக்கும் ஏற்ற வேண்டும் அல்லது எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஏற்ற வேண்டும். ஏதாவது ஒரு நடைமுறை இருக்க வேண்டும். ரேண்டமாக ஏற்றியது எதனால் என்பதுதான் எல்லோருக்கும் ஒரு கேள்வி.”

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், வழக்கமாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே சொத்து வரி உயர்த்தப்படும் என்றும், ஆனால் தற்போது எந்த விவாதமும் இன்றி சர்வாதிகாரமான முறையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், முன்னறிவிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்ட சொத்து வரி உயர்வை நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட வரித்தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான வரியாக முன்கூட்டியே வரவு வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய 6 பேர் சஸ்பெண்ட்..! சென்னை கார்ப்பரேஷனில் Action Mode..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share