"சென்னையில் பறக்கும் ரயில் இனி மெட்ரோ வசம்!" மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!
சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றமாக, பறக்கும் ரயில் (MRTS) சேவையைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் கொள்கை அளவிலான ஒப்புதல்வழங்கியுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைக்கவும் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னையில் உள்ள பறக்கும் ரயில் (MRTS) போக்குவரத்துச் சேவையைத் தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கானக் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பியக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர், தமிழகத்தின் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமைச்சரின் பதிலில் இடம்பெற்றுள்ள முக்கியச் செய்திகள் இதோ,
சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயங்கி வரும் பறக்கும் ரயில் போக்குவரத்துச் சேவையின் சொத்துக்கள், பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பறக்கும் ரயில் சேவையைச் சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் (CMRL) ஒருங்கிணைப்பதற்கான விரிவானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதையும் படிங்க: “சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
5Rகடந்த 2009 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலானக் காலகட்டத்தில் தமிழகத்தின் ரயில்வே உள்கட்டமைப்புப் பணிகளுக்காக வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பு 2025-26-ஆம் நிதி ஆண்டில் இந்தத் தொகை சுமார் ஏழரை மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.6,626 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 9 புதிய வழித்தடங்கள், 3 அகல ரயில் பாதை மாற்றங்கள் மற்றும் 3 இரட்டை வழிப்பாதை அமைத்தல் என மொத்தம் 1,700 கி.மீ நீளத்திற்கு ரூ.22,808 கோடி மதிப்பிலானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்திப்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே 22.52 கி.மீ நீளத்திற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைப்பதற்கான ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டு, அதற்கானப் பணிகள் தற்போதுத் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!