மீண்டும் வங்கி கணக்கில் ரூ.5000... விரைவில் பெண்களுக்கு அடிக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்... கசிந்தது திமுக சீக்ரெட் ப்ளான்...!
இன்று 5 ஆயிரம் ரூபாய் மகளிர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இப்போது 1.30 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. அந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகையானது 1000 ரூபாயில் இருந்து 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டிலும் திமுக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குமா? என பெண்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த திட்டத்திற்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதன் மூலமாகவே பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் மகளிர் உரிமைத்தொகையை 1000 ரூபாயில் 1,500 ரூபாய் அல்லது 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரமும், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING அடிச்சது ஜாக்பாட்... மகளிர் உரிமைத் தொகை ரூ.5000... வங்கி கணக்கில் இன்று டெபாசிட்...முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு...!
பீகார் தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமார் அரசு ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் ரூ.10,000 செலுத்தியது. இதனையடுத்து 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றி வரலாற்று சாதனையுடன் மீண்டும் ஆட்சி அமைந்தது. பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக இந்த பணம் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக கூறினாலும், தேர்தலுக்காக பாஜகவின் ஆலோசனையின் படி இந்த தொகையை நிதிஷ் குமார் அரசு வழங்கியதாக கூறப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டிலும் அதே பாணியை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் மதுரையில் நடக்கவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மாபெரும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. பீகாரைப் போலவே தமிழகப் பெண்களுக்கும் 10,000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தைப் பிரதமர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதன் மூலம் தமிழகப் பெண்களின் ஆதரவைப் பெற்று, பாஜக-வின் செல்வாக்கை மாநிலத்தில் நிலைநிறுத்துவதே பிரதமரின் நோக்கமாக உள்ளது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தைப் பற்றிய ரகசியத் தகவல்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியவந்தன. பா.ஜ.க-வின் இந்தத் திட்டத்தை எதிர்கொள்ள அவர் உடனே களத்தில் இறங்கி உள்ளார். மோடி மதுரையில் அறிவிப்பை வெளியிடும் முன்பே, தமிழக அரசின் சார்பில் மீண்டும் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் மகளிர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.5,000 வழங்கும் புதிய திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார். இது ஒரு கடன் உதவித் திட்டமாகவோ அல்லது சுயதொழில் தொடங்குவதற்கான மானியமாகவோ இருக்கலாம். அல்லது நேரடியாக வங்கிகளில் பணம் வழங்கும் திட்டமாகவோ இருக்குலாம் எனக்கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் விரைவில் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிரடி பிளானை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்..!! 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை..!!