தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!
இஸ்ரேலின் வன்முறைப் பாதை கண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரான் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் நேற்று நள்ளிரவு முதல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தாக்குதலை நிறுத்தாவிட்டால், டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைக்கிறதா தவெக? பனையூரில் 2 மீட்டிங்!!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் த்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் வன்முறை பாதை கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பொறுப்பற்ற ஆக்கிரமிப்புச் செயலாகும்.
இது பரந்துபட்ட அளவில் ஒரு போரை தூண்டிவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. காசா மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும். இனியும் போர்கள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது தமிழக மக்கள் யாருன்னு தெரியும்... எடப்பாடி பழனிசாமி சாடல்!!