நிறைமாத கர்ப்பிணியை பார்த்ததும் சட்டென CM விஜய் செயல்..! பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் நடந்த சம்பவம்..!!
எரிசக்தி துறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. எரிசக்தித் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்வு தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் மின்துறை சார்ந்த உதவி பொறியாளர் பணிகளுக்கு தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. TNPSC வாயிலாகத் தேர்வான இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் அரசுப் பணியில் இணைவது அவர்களின் கனவை நனவாக்கியதோடு, மாநிலத்தின் எரிசக்தித் துறையை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்தது.
முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பணி நியமன ஆணையை நேரில் வழங்கி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இந்த நியமனங்கள் தமிழ்நாட்டில் மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய் அரசு... நாளை மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!
சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 401 பேரின் நியமனம் அதன் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. புதிய பணியாளர்கள் மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு மற்றும் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தனித்தனியாக பணிநீயமான ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார் எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணிநீயமான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அக்ஷயா என்பவருக்கு முதல்வர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதையும் படிங்க: விஜய் பேச்சு ரீல்ஸ்க்கு சரியா போச்சு..? அந்த கட்சி பெயரை ஏன் சொல்லல CM..? கிருஷ்ணசாமி கிடுக்கிப்பிடி கேள்வி..!