"தேசிய மருத்துவர் தினம்"..! மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு..! முதல்வர் விஜய் வாழ்த்து..!
தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மருத்துவத் துறையின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவையைப் போற்றும் ஒரு முக்கியமான தினமாகும். மருத்துவர்கள் மக்களின் உயிரைக் காக்கும் கரங்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தின் வரலாறு டாக்டர் பிதான் சந்திர ராய் தொடர்புடையது. அவர் 1882 ஜூலை 1 அன்று பிறந்து, அதே தேதியில் 1962 இல் மரணமடைந்தார். மருத்துவர் மட்டுமல்லாமல், மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் பணியாற்றிய அவர், இந்திய மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினார். இந்திய மருத்துவ சங்கம் முயற்சியால் 1991 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் தேசிய மருத்துவ தினமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இது அரசு அளவில் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படத் தொடங்கியது.
மருத்துவர்கள் நாள் காலம், இடம் பாராமல் உழைக்கும் அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் நாள். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றியதை நாம் மறக்க முடியாது. இன்றைய உலகில் மருத்துவ அறிவியல் வளர்ந்திருந்தாலும், மருத்துவர்களின் மனிதநேயமும் அக்கறையும் தான் உண்மையான மருந்தாக இருக்கிறது. பல மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் இந்த நாளில் மருத்துவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும் சிறப்பு முகாம்கள் போன்றவை இன்று நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: அரசியலின் அடுத்தடுத்த திருப்பங்கள்..! நாளை முதல் தவெக..! C.விஜயபாஸ்கரின் புதிய ரூட்... முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தேசிய மருத்துவ தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் மருத்துவ சமூகத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அவர்களின் சேவையை மதிப்பதாகவும், அரசு சார்பில் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி மீட்டிங்... தமிழக அரசியலில் புதிய திருப்பமா.? எகிறும் எதிர்பார்ப்புகள்..!!