முதல்வர் விஜய்க்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை.! மிடுக்கான நடைபோட்டு அசத்தல்..!!
காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நூற்றுக்கணக்கான காவலர்களுக்குப் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் விழா அரங்கிற்கு வந்தார். அவரது வருகையை முன்னிட்டு காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அவர் அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டு, அணிவகுப்பை ஆய்வு செய்தார். விழா அரங்கம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விருந்தினர்கள் நிறைந்திருந்தனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் மற்றும் மாநில அளவிலான சிறப்புப் பதக்கங்களும் இதில் அடங்கும். காவல்துறையில் நீண்ட காலம் தண்டனைகள் இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றியவர்கள், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் சிறந்து விளங்கியவர்கள் ஆகியோருக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மொத்தம் அறுநூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
2023, 2024, 2025 ஆம் ஆண்டுக்கான 665 சிறந்த காவல் அதிகாரிகள், காவலர்களுக்கான விருதுகளை வழங்கினார். மேலும், கடலோரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் ரோந்துப் பணிகளை மேம்படுத்தும் வகையில் 42 மஹிந்திரா தார் கார்கள் மற்றும் 96 ஹோண்டா யூனிகார்ன் பைக்குகளையும் முதலமைச்சர் விஜய் இந்த விழாவில் வழங்கினார். இது கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோரக் காவல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்தது. முதலமைச்சர் விஜய் இந்த விழாவில் காவல்துறையின் சேவையைப் பாராட்டிப் பேசினார்.
இதையும் படிங்க: ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!
சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் காவல்துறையினர் ஆற்றிவரும் பங்களிப்பை அவர் சிறப்பித்துக் குறிப்பிட்டார். விழா முழுவதும் ஒழுங்கான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது. காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இந்த விழா தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சியாகும். முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கலந்துகொண்டு பதக்கங்களை வழங்கியது காவல்துறையினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: CM விஜய் மௌன புரட்சி செய்வதில் வல்லவர்..! அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம்... EPS எச்சரிக்கை..!!