#BREAKING: அரசுப் பணி வழங்க தடையில்லை... CM விஜய்க்கு கிரீன் சிக்னல்..! ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்க தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் அலை ஒன்றை உருவாக்கிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கரூருக்கு தனது முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இது கடந்த ஆண்டு ஏற்பட்ட சோக சம்பவத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாக உரையாடும் உணர்ச்சிபூர்வமான தருணமாகவும் அமைந்தது.
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தேவக் நடத்திய பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்காமல் இருந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் இன்று அவர்களை சந்திக்க உள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வழங்க இருக்கிறார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளனர். அரசு பணி வழங்கியதற்கு சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இறந்து போனவர்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வேலை வழங்குவதால் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பி உள்ளன. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களிலும் அரசு பணி வழங்கவில்லை என்ற வாதிடப்பட்டது. அரசு வேலை வழங்குவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் பாதிக்கப்பட்டு குடும்பத்திற்கு பொருளாதார உதவி தேவைதானே என்றும் கேட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: ரீல்ஸ் போட்டாலே ACTION எடுக்குறாங்க..! விஜய் ஆட்சி... புகழ்ந்து தள்ளிய பெண்கள்.!!
அப்போது கருணை அடிப்படையில் பணிக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அல்லது புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று மாலை அரசு பணி வழங்க உள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இது அரசியல் மேடை அல்ல என்று நீதிபதிகள் மனுதாரருக்கு காட்டமாக தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே நிதி உதவி வழங்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க தடை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் தற்காலிகமானதாகவே பணி வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 100 மகளிர் பேருந்து சேவை நிறுத்தமா.? பெண்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!