#BREAKING: தேசிய அளவில் FULL FOCUS..! பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு..!
டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், பதவியேற்று சுமார் 17 நாட்களுக்குப் பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொண்டார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் இந்த சந்திப்பு, மத்திய-மாநில உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த பிறகு, இரு தலைவர்களும் நேரடியாக சந்தித்து உரையாடும் இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜய் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார். மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியின் சேவா தீர்த் பவன் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இது வெறும் மரியாதை சந்திப்பு மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு நீண்டகால கோரிக்கைகளை முன்வைக்கும் முக்கிய வாய்ப்பாகவும் அமைந்தது.
முதல்வர் ஒரு மெமோராண்டம் சமர்ப்பித்து, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவி, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!
குறிப்பாக, கர்நாடகாவின் மேகேதாடு அணைத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரான இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் விவசாயிகளின் உரிமைகளை பாதிக்கும் என்பதை அவர் வலியுறுத்தி இருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், கரிப் பருவத்துக்கான உர விநியோகம், பருத்தி இறக்குமதி மீதான வரி நீக்கம், மாநிலத்தின் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளும் இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டு இருக்கலாம் என் தெரிகிறது. மாநில நலன் சார்ந்த முக்கிய கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!