×
 

அதிமுகவில் இருக்கும் 25 எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்குத்தான் ஆதரவு! புகழேந்தி ஓபன் டாக்!

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் விவகாரத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தவெக நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை என்றும், விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி புகழேந்தி முன்வைத்த அதிரடியான வாதங்களின் புள்ளிவிவர விபரங்கள் பின்வருமாறு நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் 4 மாணவிகளுடன் காரில் சென்று விபத்தில் சிக்கியபோது, மற்றவர்களை விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். அப்போதைய துணைச் சபாநாயகர் ஜெயராமனின் செல்வாக்கால், விபத்தில் சிக்கிய வீரசுரேகா என்ற பெண் கொடுத்த வாக்குமூலத்தைக் கவனத்தில் கொள்ளாமல் பிரவீனைத் தப்பவிட்டனர். இது கொலை என்று கூறித் தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. வீரசுரேகா என்ற பெண்ணிற்காக நான் பெண்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவேன்.

பல தடைகளுக்குப் பின் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தை பார்த்து மகிழ்ந்தேன். அதிமுக முற்றிலுமாக அழிந்துவிட்டது; அக்கட்சியில் உள்ள 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவாகவே உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் பல சகுனிகள் உள்ளனர். அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்களை விஜய் அரவணைத்துச் செல்கிறார். முதலமைச்சர் குறித்து இழிவாகப் பேசுபவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்று காரசாரமாகப் பேசினார். மேலும் டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டம் பாராட்டிற்குரியது என்றும், அது பிரதமர் மோடிக்குக் கிடைத்த மாபெரும் அடி என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! காவிரியில் பங்கு நீரை பெற தவெக அரசுக்கு வலியுறுத்தல்!

இதையும் படிங்க: தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் சினிமா மாஸ் வேட்டை! தனுஷ், ஜி.வி.பிரகாஷுக்கு இபிஎஸ் நெகிழ்ச்சி வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share