அது துரோகமாக தெரியவில்லையா...? - திமுகவை லிஸ்ட் போட்டு பொளந்து கட்டிய காங்கிரஸ் செல்லக்குமார்...!
காங்கிரஸ் துரோகம் செய்து முதுகில் குத்தியதை போல் பொய் பரப்புரை செய்து வருகிறார்.. வரலாற்றை அவர்கள் திரும்பி பார்க்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் எம்.பி. செல்லக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாசிச பாஜக மறைமுகமாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட கூடாது என்ற ஒரே நோக்கில், விஜய் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கிறோம். இதற்கு கடும் விமர்சனங்கள் வந்தன. திமுக தலைவர் கடும் சொற்களால் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் துரோகம் செய்து முதுகில் குத்தியதை போல் பொய் பரப்புரை செய்து வருகிறார்.. வரலாற்றை அவர்கள் திரும்பி பார்க்க வேண்டும்.
28 ஆண்டுகள் முன் 1996.ல் தமாக உருவாகி திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சிக்கு வந்தது.
அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்கள். ஆட்சி கவிழ்ந்த போது தமாகா உடன் தோழமையில் வென்ற திமுக பாஜக அரசை தாங்கி பிடிக்க முயன்றது. இது துரோகமாக திமுகவிற்கு தெரியவில்லையா.?
காங் உடன் தோழமை வைத்து 2006.ல் சிறுபான்மை அரசாக திமுக இருந்த போது, பிரதிபலன் பாராமல் காங், திமுக. விற்கு ஆதரவு அளித்தது. பல்வேறு தியாகங்களை கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்துள்ளது.
இதையும் படிங்க: "மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!
ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுடன் தோளோடு தோள் நின்றது திமுக. இது துரோகம் இல்லையா.? உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் திமுக.வினர் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயிக்க வைத்து மீண்டும் திமுகவில் இணைத்து கொண்டனர். அது துரோகமாக தெரியவில்லையா.?.
இத்தனை துரோகங்களையும் பாஜக தமிழகத்தில் காலூன்றி விட கூடாது என்பதற்காக பொருத்து கொண்டோம். இந்த தேர்தலுக்கு பின் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்க திமுக முயன்றது. இதனால் தவெக.விற்கு ஆதரவளித்தோம்.
காங்கிரஸ் யார் முதுகிலும் குத்தவில்லை. யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அவர்கள் அளவிற்கு கீழ்தரமாக பேச விரும்பவில்லை. அதிமுக எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கர்நாடகாவில் பாஜக இதை தான் செய்தது. இதன் பின்னணியில் தவெக இருக்கிறதா என்ற கேள்விக்கு, . அவர்களே விருப்பப்பட்டு ராஜினாமா செய்கின்றனர். திமுக- அதிமுக கூட்டணி பேசியதால், அதற்கு எதிராக அவர்கள் வெளியேறி இருப்பதாக அவர்களே கூறி இருக்கிறார்.
கோவை சிறுமி வன்கொடுமை சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது. போதை பொருள் காரணமாக இருக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணையாக இருப்போம். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்..
கால அவகாசம் எடுத்து கொண்டு, பொருளாதார சூழலை ஆராய்ந்து கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்திருக்கலாம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி முதலமைச்சர் விஜய் விவசாய கடனை தள்ளூபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது.
இதையும் படிங்க: முதுகில் குத்திய காங்கிரஸ்..!! திமுக இளைஞரணி கூட்டத்தில் ஒலித்த 'காங்கிரஸ் ஒழிக' கோஷம்..!!