×
 

“அதை கேட்க வக்கில்லை...” - அதிமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்... எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கொடுத்த கமெண்ட் தான் ஹைலைட்டே...!

அதிமுக போராட்டம் குறித்த கேள்விக்கு, அதிமுக கரைந்து போகும் கட்சியாக உள்ளது. அமித்ஷா அதிமுக வாக மாறிவிட்டது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு 5000 கோடி தமிழ்நாட்டுக்கு வரவில்லை அதை கேட்க அதிமுகவிற்கு வக்கில்லை.

மதுரைகூத்தியார் குண்டு பகுதியில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிழற்குடையை திறந்து வைத்து காங்கிரஸ் தலைவர்மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு.. தனிநபர் கோரிக்கையும் கட்சியின் நிலைபாடும் வேறு. விஜய்க்கு ஊழலற்ற அரசு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வாக்களித்தார்கள்.

அதிமுக போராட்டம் குறித்த கேள்விக்கு, அதிமுக கரைந்து போகும் கட்சியாக உள்ளது. அமித்ஷா அதிமுக வாக மாறிவிட்டது. தமிழ்நாட்டிற்கு கல்விக்கு 5000 கோடி தமிழ்நாட்டுக்கு வரவில்லை அதை கேட்க அதிமுகவிற்கு வக்கில்லை.

பிரதமர் வேட்பாளர் குறி? கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் கட்சியின் கருத்து கிடையாது தனிநபர் கருத்து.. என்னுடைய கட்சியின் நிலைப்பாடு. இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் இதுதான் என்னுடைய நிலைப்பாடு.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பேச்சால் சர்ச்சையில் சிக்கிய தவெக MLA..! போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக..!!

உயர் கல்வித்துறையமைச்சர் பேசினாலே திமுகவினர் பேச விட மாட்டார்கள். இது நியாயமற்றது. உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும். சபாநாயகர் திமுகவினருக்கு கடுமையான எச்சரிக்கை விட வேண்டும்.

ஜோசியக்காரர்கள் பேசுவதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொருளாளர் வெங்கட்ராமன் தெளிவாக கூறியிருக்கிறார் அது தவெக நிலைப்பாடு கிடையாது‌. கச்சத்தீவு எதற்காக கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடனுக்காக கொடுக்கப்பட்டது

கச்சத்தீவு அதற்காக வளமான பகுதி கொடுக்கப்பட்டதும் வரலாற்று உள்ளது.
கடற்கரை வெளியுறவுத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.  கடந்த ஏழு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான மீனவர்களின் படக்குகளை இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளது.

சட்டமன்றத்தில் சத்தியபாமா எம்எல்ஏ வை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தது குறித்த கேள்விக்கு, 50 வருட திராவிட கட்சிகள் கூட பெண்களை சபாநாயகராக நியமிக்கப்படவில்லை. வருங்காலத்தில் பெண் சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் அதையும் முதல்வர் விஜய் செய்வார்.

அதிமுக அமித்ஷா அதிமுகவாக மாறிவிட்டது. கேஸ் விலை உயர்வு பற்றி பேச அதிமுகவுக்கு திராணியில்லை.  நயினார் நாகேந்திரன் பாஜகவை முடித்து வைக்கும் தலைவராக மாறிவிட்டார்.

பாஜக எத்தனையோ கட்சிகளையும் முடித்து வைப்பதற்காக வந்தது ஆனால் பாஜகவியை முடித்து வைக்க வந்த தலைவர் நயினார் நாகேந்திரன் என
மாணிக்கம் தாகூர் கூறினார்.
 

இதையும் படிங்க: அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share