×
 

ராஜ்யசபா எலெக்ஷன்... முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!!

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் கிரிஸ்டோபர் திலக் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

கிறிஸ்டோபர் திலக் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர், காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை இளைஞர் காங்கிரஸ் மூலம் தொடங்கி படிப்படியாக கட்சியின் உயர் பதவிகளுக்கு உயர்ந்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC/ST பிரிவிலும், அகில இந்திய காங்கிரஸ் இளைஞர் பிரிவிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முன்பு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மாநிலங்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: #BREAKING ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்... யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? 

இந்த ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பதற்கு இன்றுடன் கடைசி நாள் என்பதால் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின்போது, செல்வப் பெருந்தகை, கிரிஷ் ஜோடங்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: #BIG BREAKING தலைகீழ் திருப்பம்... கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share