இதில் ஏன் இவ்வளவு கதறல்? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி!
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெக-வில் சேர்ந்தது வெளிப்படையான அரசியல் முடிவு; இதில் ஏன் இவ்வளவு கதறல் என ஸ்டாலினுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வெளிப்படையாகத் தவெக-வில் சேர்ந்திருப்பது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு; இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு கதறல்?" என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) மாணிக்கம் தாகூர் அவர்கள் இன்று காரசாரமாகப் பதிலடி கொடுத்துப் புதிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை விமரிசித்துக் கூட்டு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்குத் தார்மீகப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தேர்தல் முடிவுகளுக்குப் பின் கோட்டையிலும் டெல்லியிலும் நடந்த திரைமறைவு நாடகங்களை அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். அவர் தனது தார்மீக அறிக்கையில், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 107 எம்.எல்.ஏ.க்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள்.
உங்களிடம் (திமுக) இருந்தது 59 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே, மக்கள் உங்களைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின் என்ன நடந்தது? உதயநிதியும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து, பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவரின் 'connecting call' அரசியலில் ஈடுபட்டு, மக்கள் அளித்த தீர்ப்பைத் டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த 'underground operation' எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது" என்று அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: குதிரை வேகத்தில் குதிரை பேரம்! தவெக அரசை 'துயரசக்தி' என அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்ததற்கான தார்மீகக் காரணங்களை விளக்கிய மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாகப் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியை அல்லது ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது. அதனால்தான் நாங்கள் தவெக அரசை ஆதரித்தோம்; இடதுசாரிகளும் ஆதரவு அளித்தனர். ஐயுஎம்எல், விசிக ஆகிய கட்சிகள் அரசில் இணைந்தன. இதன் மூலம் உங்கள் மகனின் (உதயநிதி) அரசியல் திட்டம் மீண்டும் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று யார் நாடகம் ஆடுவது என்பதை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கூர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது எனச் சாடியுள்ளார்.
மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்துப் பேசிய அவர், இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது இடங்களை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துவிட்டு, வெளிப்படையாகத் தவெக-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நேர்மையாக நடந்த அரசியல் முடிவு. இதில் மறைமுகப் பேரம் ஏதுமில்லை, இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் தார்மீக ஆட்சையைக் காப்பாற்ற யார் உறுதியாக நின்றார்கள் என்பதைத் தமிழ்நாடு நன்றாக அறியும்.
ராஜினாமா செய்யப்பட்ட அந்த மூன்று தொகுதி மக்களும் விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் தங்களது இறுதித் தீர்ப்பைச் சொல்லட்டும்" என்று மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் மிக ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக, தவெக மற்றும் அதிமுக இடையே முக்கோணப் போர் நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் எம்பியின் இந்த 'அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்' குறித்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் இமாலயப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை காக்கும் போர்க்குணம் நமக்கே உரியது! கூட்டணி தலைவர்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி!