×
 

10 வயது சிறுமி மரணத்தில் நடுங்கவிடும் திருப்பம்... சிக்கிய காமக்கொடூரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்... நடந்தது என்ன?

பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றவாளி கொடுத்துள்ள வாக்குமூலம் உச்சக்கட்ட பதற்றத்தை உருவாக்கியுள்ளது. 

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. 

இந்த நிலையில், இன்று மாலை சிறுமி மாயமானது குறித்த முதல் தகவல் அறிக்கையை  பெற்றோரிடம் வழங்கி போலீசார் கையொப்பம் பெற்றுள்ளனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மளிகை கடைக்குச் சென்ற சிறுமியை நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. 

இதையும் படிங்க: #BREAKING கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது... பக்கத்திலேயே இருந்த முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?

இதுகுறித்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரித்த போது, சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கார்த்திக் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கார்த்திக்கிற்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. எனினும், சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன, பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததா என்பது குறித்து போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், சிறுமி கொலை செய்ததில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கார்த்திக் கொடுத்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தோட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்ற கார்த்திக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை சிறுமி யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கழுத்தை நெறித்துக் கொன்று முட்புதரில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஏற்கனவே சிறுமி மாயமானது குறித்து பெற்றோர் புகார் அளித்தவுடன் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்ததாகவும், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாகக் சடலத்தை வாங்க மறுத்து சிறுமியின் உறவினர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிடக்கூடும் என்பதாலும், பதற்றமான சூழ்நிலையை தவிர்க்கவும் சூலூர் காவல்நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: கோவையை டோட்டலாக கண்ட்ரோலில் எடுத்த காவல்துறை... 3,000 சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்ட பிரம்மாண்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share