காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!
கோவையில் அதிர்ச்சி: காதலுக்கு மறுப்பு கூறிய இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை: காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (மாரியப்பன்) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நட்பாகத் தொடங்கிய உறவு பின்னர் காதலாக மாறியது.
இந்நிலையில், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 31க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், இளம்பெண்ணை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!
நேற்று மாலை கார்த்திக் தனது மூன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அங்கு வெளியே நின்றிருந்த இளம்பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை (பெட்ரோல் குண்டு) வீட்டின் மீது வீசினர்.
ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்டில் தீப்பிடித்தது. அங்கு இருந்த கேன்வாஸ் ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உடல் காயம் ஏற்படவில்லை.
இளம்பெண்ணின் தந்தை உடனடியாக தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கார்த்திக் உள்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள நால்வரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!