×
 

#BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

கோவையில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் தனது மகன் ராஜாவுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த நிலையில் சாந்தி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

நேற்றைய தினம் அவரது மகன் ராஜா வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மீண்டும் இரவு வீட்டிற்கு வந்தபோது, சாந்தி ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலமாக வீட்டில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா, உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கிருந்த தடயங்களைச் சேகரித்தனர்.

இதையும் படிங்க: கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

இதையடுத்து, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ராஜா வந்தபோது வீடு சாத்தப்பட்டிருந்ததாகவும், உள்ளே சென்று பார்த்தபோதுதான் தனது தாய் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

சாந்தி எப்போது கொலை செய்யப்பட்டார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று முன்தினம்தான் ஒரு கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூட சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குள் பார்த்தீர்கள் என்றால், நேற்று இரவு மீண்டும் ஒரு பெண் வீட்டுக்குள் புகுந்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போதுவரை இந்தக் கொலைக்கான காரணம் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து நகையோ, பணமோ திருடு போகவில்லை என்ற தகவலையும் போலீசார் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அந்தப் பெண் கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share