×
 

இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தினேஷ், மாதேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது மாதேஷ் என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது.

கோவையில் நேற்று 16 வயது சிறுவன் மற்றும் 22 வயதுடைய மாதேஷ் ஆகிய இருவர், அஸ்வின் என்ற 22 வயது இளைஞரை அதிகாலை நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து, முன்பகை காரணமாக அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோவாகப் பதிவு செய்து, செல்ஃபி வீடியோவாகவும் மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்... சீருடையுடன் காவலர் அட்ராசிட்டி...!

இந்நிலையில், இன்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, பொள்ளாச்சி அருகே இந்த 16 வயது சிறுவனும், மாதேஷ் என்ற இளைஞரும் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களைப் பிடிக்கச் சென்றபோது, மாதேஷ் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர் சுவரில் இருந்து குதித்ததில், அவரது வலது கை முறிந்ததாகவும், இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இந்த இளைஞர்கள் முன்பகை காரணமாக அஸ்வின் என்ற இளைஞரை கொடூரமாகக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும், கொலையை எவ்வாறு செய்தோம் என்பதையும் வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில், கொலை நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் ஐந்து தனிப்படைகளை அமைத்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை முடிக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 வயது சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுவார் என காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share