வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!
வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது குழந்தை இறந்த நிலையில், ரகசியமாக புதைத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது பலருக்கு இயற்கையானது, வசதியானது என்று தோன்றலாம். பழங்காலத்தில் பெரும்பாலான பிரசவங்கள் வீட்டில்தான் நடந்தன. ஆனால் இன்றைய காலகட்டத்தில், மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், வீட்டுப் பிரசவம் பல ஆபத்துகளை உடன் கொண்டு வருகிறது. இதைப் பற்றி பேசும்போது, சில சமயங்களில் எல்லாம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், ஏற்படக்கூடிய சிக்கல்கள் மிகவும் தீவிரமானவை என்பதை மறந்துவிடக் கூடாது.
முதலில் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், திடீரென்று ஏற்படும் சிக்கல்களை உடனடியாக சமாளிக்க முடியாத நிலை. பிரசவத்தின் போது தாய்க்கு அதிக ரத்தப்போக்கு வரலாம். இது மிக வேகமாக நடக்கும்; சில நிமிடங்களில் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடும். மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக அவசர சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும்.
அடுத்ததாக, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். பனிக்குட நீர் முழுவதும் வெளியேறிவிட்டால் அல்லது குழந்தை தலைகீழாக இருந்தால், மூச்சு பிடிக்காமல் போகலாம். மருத்துவமனையில் இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். வீட்டில் இது சாத்தியமில்லாதபோது குழந்தையின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது.
இதையும் படிங்க: COLDRIF மருந்து... மேலும் ஒரு உயிர்பலி... 4 வயது குழந்தை உயிரிழந்த சோகம்..!
இதுபோல நெல்லையில் ஒரு கொடூரம் நடந்து உள்ளது. நெல்லையில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது குழந்தை இறந்துள்ளது. இதனை மறைக்க யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணின் கணவர் புதைத்து வைத்து இருந்தது தெரியவந்துள்ளது. பிரசவ வலி வந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த நசீர் உசேன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??