பெட்டி பெட்டியாக வெடிபொருட்கள் பறிமுதல்... தர்பூசணி பழங்களின் அடியில் காத்திருந்த அதிர்ச்சி..!
தர்பூசணி பழங்களுக்கு அடியில் வைத்து கடத்தப்பட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெடிப் பொருட்கள் என்பவை மனித நாகரிகத்தில் சுரங்கங்கள் தோண்டுதல், குவாரிகளில் பாறைகளை உடைத்தல், சாலை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள், கட்டிட இடிப்பு போன்ற பணிகளுக்கு பெருமளவு பயன்படுத்தப்படும் இரசாயன கலவைகள். இவற்றில் மிக முக்கியமான இரண்டு வகைப் பொருட்கள்தான் டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஏனெனில் பெரும்பாலான வெடிப் பொருட்களை வெடிக்கச் செய்ய டெட்டனேட்டர் அவசியம் தேவைப்படுகிறது.
இந்த ஜெலட்டின் குச்சிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. இவை cap sensitive என்று அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு சிறிய டெட்டனேட்டரின் வெடிப்பால் மட்டுமே முழு வேகத்தில் வெடிக்கும் தன்மை கொண்டவை. இவை தண்ணீருக்கு ஓரளவு எதிர்ப்பு கொண்டிருப்பதால், ஈரமான சுரங்கங்கள் அல்லது நீர் நிரம்பிய இடங்களிலும் பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் கடுமையான சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. உரிமம் இல்லாமல் வைத்திருப்பது, கொண்டு செல்வது கடும் தண்டனைக்குரிய குற்றம். அவ்வப்போது உரிமம் இல்லாமல் வெடிப்பொருட்கள் கடத்தப்படும் போது போலீசார் சோதனையில் சிக்குவது நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: என்னையே BLOCK பண்ணுறியா? காதலனை வீடுதேடிச் சென்று கொன்ற காதலி..!
பாலக்காடு பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது தர்பூசணி பழங்களுக்கு அடியில் வைத்து கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூருக்கு கொண்டு சென்ற போது வெளிப்பொருட்கள் பிடிபட்டன. டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!