×
 

#BREAKING: பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி… ஐகோர்ட் உத்தரவு

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜி. வெங்கட்ராமன், ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக, தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவர் முன்னதாக காவல்துறை தலைமையகத்தில் கூடுதல் இயக்குநராக (ஏடிஜிபி) பணியாற்றியவர், மேலும் சைபர் குற்றப்பிரிவு போன்ற முக்கிய பிரிவுகளிலும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழக அரசு ஆறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றமும், ஐந்து பேருக்கு டிஜிபி பதவி உயர்வும் வழங்கியது.

இதில் ஜி. வெங்கட்ராமன் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபி பதவியில் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டார்.இந்த நியமனம் தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவை மேலும் வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவாகக் கருதப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவி என்பது மாநிலத்தில் பொது அமைதி, குற்றத் தடுப்பு, மற்றும் காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை மேற்பார்வையிடும் மிக முக்கியமான பொறுப்பாகும். வெங்கட்ராமனின் நியமனம், அவரது நிர்வாகத் திறன் மற்றும் காவல்துறையில் அவரது நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 

சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் என்று ஓய்வு பெற்ற நிலையில் வெங்கட்ராமன் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தமிழகமே “ROLE MODEL”... உறுப்பு தானம் செய்தவர்கள் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும்… அமைச்சர் மா.சு. அறிவிப்பு!

டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டது எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும் வழக்கறிஞருமான ஆர்.வரதராஜ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதையும் படிங்க: எல்லாம் அவங்களுக்காக தான்! தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு! தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share