×
 

பிளான் பண்ணிட்டீங்களா? தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை மக்களே அலர்ட்!

தீபாவளி பயணத்துக்கான முன்பதிவு இன்று, செப்டம்பர் 6-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. குறிப்பாக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். இதனால் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.

தற்போது ரயில் பயணத்துக்கான முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக மேற்கொள்ளும் நடைமுறை அமலில் இருப்பதால், தீபாவளி பயணத்துக்கான முன்பதிவு இன்று, செப்டம்பர் 6-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. குறிப்பாக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: பண்டிகையை கொண்டாடுங்கடே! கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்! அமெரிக்கா கொடுத்த அங்கீகாரம்!

அதேபோல் நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு செப்டம்பர் 7-ம் தேதியும், நவம்பர் 7-ம் தேதி பயணத்துக்கான முன்பதிவு செப்டம்பர் 8-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால் முக்கிய ரயில் நிலையங்களில் இன்று முதலே பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லும் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தயாராகி வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் ரயில்களிலும் பயணம் செய்ய பலர் ஆர்வமாக உள்ளனர்.

தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதற்கான பயணத்துக்கும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. நவம்பர் 10-ம் தேதி முதல் திரும்பும் பயணங்களுக்கான முன்பதிவையும் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

ரயில் பயணம் குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பாகவும் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கும் வசதியாக இருப்பதால், தீபாவளி காலத்தில் ரயில்களுக்கான தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் விரைவாக இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளது. நேரடியாக ரயில் நிலையங்களில் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய உள்ளனர்.

தீபாவளி பயணத்தை திட்டமிடும் சென்னைவாசிகளுக்கு இன்று தொடங்கும் ரயில் முன்பதிவு முக்கியமான நாளாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஆயுத பூஜை, தீபாவளிக்கு டிக்கெட் விலை எகிறுமா? ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு அதிரடி செக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share