×
 

சென்னைக்கான ஸ்பெஷல் வாக்குறுதிகள்..! திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

சென்னைக்கான திமுகவின் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

திமுக பல்வேறு துறைகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வலியுறுத்துகிறது. பெண்களின் உரிமைக்காக முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது மாதம் ரூ.1,000 வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் 1.37 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடையவுள்ளனர். மேலும், வருமான வரி செலுத்தாத இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்பிலான ‘இல்லத்தரசி’ கூப்பன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வீட்டு உபகரணங்களை வாங்கவோ அல்லது பழையவற்றை மாற்றவோ முடியும்.கல்வித் துறையில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் தற்போது 1 முதல் 5ஆம் வகுப்பு வரை செயல்படும் நிலையில், 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்டு 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் பிரத்தியேகமாக சென்னை மாவட்டத்திற்கு என முக்கிய வாக்குறுதிகள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும். மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும். கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும். சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து. பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.

இதையும் படிங்க: பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின்தான்..! அமைச்சர் ரகுபதி பரப்புரை.!!

திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள். எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும். மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும். மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும். பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும். அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும். மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சனைக்குத் தீர்வு. விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் வருவாக்கப்படும். உலகளாவிய சிறப்பு மையம். Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு, 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள். உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway). உலகத்தரம் வாய்ந்த பகட்டமைப்பு. உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆராய்ச்சி மையம், அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: எனக்கு விஜய் படம் பாக்காம தூக்கம் வராதே..! பெரம்பூர் தொகுதியில் திமுகவை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பரப்புரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share