×
 

கேள்வி கேட்கும் பெண்களை "கூலிப்படை " வைத்து துன்புறுத்தும் திமுக..!! ஆதாரத்தோடு விளாசிய அதிமுக..!!

இணையதளத்தில் கேள்வி கேட்கும் பெண்களை திமுக கூலிப்படை வைத்து துன்புறுத்துவதாக அதிமுக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்து பேசி இருந்தார். அப்போது தனக்கு நயன்தாரா வேண்டும்., அதனை முதல்வர் நிறைவேற்றுவாரா என்று பேசி இருந்தார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கண்டனங்கள் எழுந்த நிலையில், உடனே அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் பெண்களை இணையதள கூலிப்படையை கொண்டு தரக்குறைவான சொற்களால் பேசுவதும், துன்புறுத்துவதும் தான் பெண்ணியம் போற்றும் லட்சணமா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

பெண்மையை போற்றுவதாக போலி வேடம் போடும் ஸ்டாலின் மாடல் அரசு, அதிகார பலத்தால் ஒரு பெண்ணின் குரலை ஒடுக்க நினைப்பது கோழைத்தனம் என்றும் கூறியுள்ளது. நேற்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் தவறிய பேசிய ஒரு கருத்திற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் பூதக்கண்ணாடியை வைத்து ஆராய்ந்து, பெண்ணியம் பேசுகிறோம் என குதித்த திமுகவினர் எல்லாம் இன்று எங்கே போனார்கள் என்று கேட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுவை அரசியலில் தலைகீழ் திருப்பம்... கூட்டணியில் உச்சகட்ட குழப்பம்... காங்கிரஸை கடுப்பேற்றும் திமுக...!

பெண்ணியம், பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுகவினர் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போலதான் என்பதை மக்கள் ஒன்றும் அறியாமல் இல்லை என்றும் அதிகார திமிரால் பெண்களின் குரலை நசுக்க நினைக்கும் திமுகவின் இந்த மமதைக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறி உள்ளது. 

இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு..! பரபரப்பு அரசியல் களம்..! விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share