தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!
ஆகாஷ் மரண வழக்கில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி உதவியை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெல்சன் (26). அந்தப் பகுதியில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷை பாலத்தில் இருந்து குதித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர் அங்கு அவர் திடீரென முச்சுதிணறல் ஏற்பட்டு உயிர் இழந்தார்.
இறப்பதற்கு முன்பாக ஆகாஷ் மானாமதுரை நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை காலை போலீசார் இரும்பு கம்பியால் அடித்து ஒடித்ததாக கூறியிருந்தார் இந்த தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆகாஷ் மரணம் அடைய காரணமான போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஏராளமானவர்கள் ராமேஸ்வரம் மானாமதுரை நான்கு வழி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆகாஷின் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இன்ஸ்பெக்டர் திலீபன்,சப்-இன்ஸ்பெக்டர் குகன் போலீசார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார் மற்றும் மனோகரன் ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் திலீபனை ராமநாதபுரம் சரக்கடி டிஐஜி மணிவண்ணனும் மற்றவர்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்தும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!
இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆகாஷ் மரணம் தொடர்பாக அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், ஆகாஷ் மரண வழக்கில் அவர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.7.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். நேற்று அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் முறையே ரூ.6 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தனர்.
இதையும் படிங்க: “மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது...” - வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கலகல பேச்சு...!