×
 

"தவெக மாமி அரசே"..! பிஜேபியிடம் அடகு வைத்த அதிகாரம்..! அப்பாவு கடும் தாக்கு.!!

தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தை அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு ஏதுவாக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலை 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலாக அறிவித்து அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் "தமிழ்த்தாய் வாழ்த்தை" ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் ஒலிப்பேழை இன்றி அனைவரும் எழுந்து நின்று பாட வேண்டும் என 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிட்டு "அதன்படி தமிழ்தாய் வாழ்த்துக்கு" உரிய மரியாதை வழங்கப்பட்டு வந்தது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் “தவெக மாமி ஆட்சி” வந்தபின் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலை தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயர் தாங்கி நிற்கும் நெல்லை பல்கலைக்கழக ஆளுநர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்திய போது மத்திய அரசின் சுற்றறிக்கை, ஆளுநரின் ஆணை என்று கூறி தவெக மாமி அரசு பதுங்கி, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த உங்கள் இயலாமை சந்தி சிரிக்கிறது CM sir என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல்நாள், மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் இசைக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசு நிகழ்ச்சி ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்று சாக்குப் போக்கு சொல்லி தமிழை அவமானப்படுத்தும் என்று கூறினார். ஏற்கனவே "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலுக்கு இருந்த அதிகாரத்தை பாஜக-விடம் அடகு வைத்து விட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து மக்களை ஏமாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share