"திரு வி க நகர் தொகுதியில் குண்டர்கள்"..! திமுக வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு..!!
திரு வி க நகர் தொகுதியில் சம்பந்தமில்லாத ஆட்கள் இருப்பதாக திமுக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில்
இதையும் படிங்க: மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!
தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஆட்கள் இருப்பதாக திரு வி க நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரவிச் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஆட்கள் அங்கேயே இருந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த குண்டர்களை வெளியேற்றினால் தான் அமைதியான வாக்குப்பதிவை நடத்த முடியும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திரு.வி.க.நகர் திமுக வேட்பாளர் ரவிச் சந்திரன் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!