உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி? பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இருந்து கசிந்த தகவல்..!!
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவும் காங்கிரஸும் இடையேயான கூட்டணி உறவு தமிழக அரசியலில் நீண்டகாலமாக மிக முக்கியமானதாகவும், சில சமயங்களில் சிக்கலானதாகவும் இருந்து வருகிறது. இந்த உறவு வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் வரலாறு, தேசிய அரசியல் சூழல், பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளும் தேவை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த உறவில் சில பதற்றங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணிகள் இருந்து விலக இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 27 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்குவதாக திமுக தரப்பில் கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.63 கோடியில் மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம்..!! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!
இன்று மாலை கே.சி. வேணுகோபால், கிரிஷ் ஜோடங்கர் ஆகியோர் தமிழகம் வர இருப்பதாகவும் இன்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தகவல் விளங்குகிறது.
இதையும் படிங்க: Twist இருக்கு போலயே..! தலைமை முடிவு பண்ணா ஏத்துப்போம்..!! பொடி வைத்த MP மாணிக்கம் தாகூர்..!