×
 

ARREST..! சிக்கிய திமுக கவுன்சிலர்..!! இண்டிகோ விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறல்..!!

இண்டிகோ விமானத்தில் பனிப் பெண்ணிடம் அத்துமீறியதாக திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பணி பெண்ணிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக பதவி வகிப்பவர் பிரபாகரன். திமுகவைச் சேர்ந்த பிரபாகரன், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

 விமானத்தில் பயணித்தபோது குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது விமான பணி பெண்ணிடம் எந்த ஊர் என்று கேட்டு அத்துமீறியதாக புகார் எழுந்தது. விமானப் பணிப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிரபாகரனுடன் அவரது நண்பர் தியாகு என்பவரும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்பட்டதால், இருவரும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கட்சியைச் சேர்ந்த ஒரு உள்ளாட்சி பிரதிநிதி இத்தகைய செயலில் ஈடுபட்டது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

சிலர் இதை "அசிங்கமான செயல்" என்று குறி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கவுன்சிலர் விமானத்தில் அத்து மீறியதாக கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: எல்லாத்தையும் கொன்னுட்டு... "வெல்வோம் ஒன்றாக" வேற..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share