இனி ஒவ்வொரு சம்மருக்கும் ரூ.2 ஆயிரம்...! அமைச்சரின் அறிவிப்பால் பெண்கள் செம்ம குஷி..!!
இனி ஒவ்வொரு கோடை காலத்திலும் மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த மாதம் மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகையாக மொத்தமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தேர்தலில் பெண்களின் ஓட்டுகளை கவருவதற்காக திமுக இந்த தொகையை கொடுத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மகளிருக்கு சிறப்பு தொகையாக ரூ.2,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு மேம்பாடாக பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பு சட்டப்பேரவை விவாதத்தின் போது எழுந்தது. எதிர்க்கட்சியினர், கோடை காலத்தில் மட்டும் ஏன் இந்த சிறப்பு தொகை? இது தேர்தல் நோக்கமா? என்று கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் கீதா ஜீவன் எழுந்து தெளிவாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட் எதிரொலி..! தமிழ்நாடு அரசின் இரண்டாவது பொருளாதாரம் அறிக்கை இன்று வெளியீடு..!
"இனி ஒவ்வொரு வருடமும், கோடை கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 மகளிருக்கு வழங்கப்படும்" என்று அவர் உறுதிப்படுத்தினார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள், குடும்பச் செலவுகள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்படும் என்று விளக்கினார். இது தற்காலிகமான தேர்தல் உதவி அல்ல, ஆண்டுதோறும் தொடரும் ஒரு நிரந்தர ஏற்பாடாக இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார். அமைச்சர் கீதா ஜீவனின் அறிவிப்பால் பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்பீடு காட்டும் திமுக... அண்மையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு பொறுப்பு..!