×
 

தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்! கொஞ்சம் கூட அக்கறை இல்ல.. முதல்வரை வாட்டி எடுத்த எடப்பாடி!!

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிர்வாகி சக்கரவர்த்தி இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்ததாகவும், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது என்றும் கூறினார்.

அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்றுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதே இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, தான் எச்சரித்ததாகவும், ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒன்றுமே இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே.. இபிஎஸ், கனிமொழி தந்தையர் தின வாழ்த்து!!

ரோடு ஷோவிலும் , போட்டோஷூட்டிலும் இருக்கும் கவனம், சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலோ, மக்களைக் காப்பதிலோ இந்த பொம்மை முதலமைச்சருக்கு துளியும் இல்லை என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 

கள்ளத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை விசாரிக்க வேண்டும்.,தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழித்திட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: நாட்டுப்புறப் பாடலால் அனைவரது பேரன்பை பெற்றவர்... கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share