ஒரு பக்கம் தொகுதி மறு சீரமைப்பு, மறுபக்கம் ஹிந்தி திணிப்பு... திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டம்..!
தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்ட தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் தொகுதி மறு சீரமைப்பை தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது.
தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கட்டாய கையெழுத்து! பிஜேபி நிர்வாகிகள் 5 பேர் அதிரடி அரெஸ்ட்...
இதேபோல் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றால்தான் தமிழகத்திற்கு உரித்தான நிதியை கொடுப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மும்மொழி கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொள்ளதாக கூறியும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
மத்திய அரசின் இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் பல தரப்பட்ட அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மும்மொழிக் கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பின் கீழ் ஒன்றிய அரசை கண்டித்து இந்த கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
தொகுதி மறு சீரமைப்பு, ஹிந்தி திணிப்பு ஆகியவற்றை கண்டித்து திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துறைமுகம் கலந்து கொண்டு பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே என் நேருவும், திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோரும் கலந்துகொண்டு பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பட்டியலையும் திமுக வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இது திமுகவின் அல்லு சில்லு பையலுக வேலை'... போஸ்டருக்கு அண்ணாமலை பதிலடி..!