அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!
இல்லத்தரசி திட்டத்தில் கணவனிடம் கேட்காதீர்கள் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் உங்கள் கணவன் யாராவது முறைத்தால் அண்ணனிடம் சொல்லி விடுவேன் என்று கூறுங்கள் என மு க ஸ்டாலின் கலகலப்பேச்சு
புதுக்கோட்டை எப்போதுமே திமுகவின் கோட்டை என முழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரம்மாண்டத் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றார். இரண்டாவது முறையாகத் தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்து புதிய வரலாறு படைக்கப் போவதாகத் தெரிவித்த அவர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடினார்.
திமுக அரசின் சாதனைகளை விளையாட்டோடு ஒப்பிட்டு முதல்வர் பேசினார் கிரிக்கெட்டில் பல வீரர்கள் சாதனைகள் செய்திருக்கலாம், ஆனால் பெரும்பாலான சாதனைகள் சச்சின் டெண்டுல்கரிடம் தான் இருக்கும். அதேபோல்தான் அரசியலில் யாராலும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை (Records) திமுக செய்துள்ளது. நமது முன்னோடித் திட்டங்களைப் பார்த்துப் பல மாநிலங்களும், ஏன் ஒன்றிய அரசே கூட காப்பியடிக்கிறது. மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுக தான் 'ஒரிஜினல்'.
ஒன்றிய அமைச்சர்களின் மும்மொழிக் கொள்கை குறித்த பேச்சிற்கு முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்தார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதி தருவோம் என்கிறார். நான் சொல்கிறேன், 2000 கோடி அல்ல 10,000 கோடி கொடுத்தாலும் அண்ணா வகுத்துக் கொடுத்த இருமொழிக் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன். கல்வியைக் காவிமயமாக்கவும், இந்தியைத் திணிக்கவும் நடக்கும் முயற்சிகளைத் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் விதிகளை மீறும் முதலமைச்சர்! அரசு வாகனத்தை பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார்!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை 'அடிமை' எனச் சாடிய ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ஒரு 'பாகம் தாங்கி பழனிசாமி'. அவர் பழனிசாமி அல்ல, ஆமாம் சாமி, அடிமை சாமி. ஆர்.எஸ்.எஸ்-ன் ஒரு அங்கமான மும்மொழிக் கொள்கைக்கு அவர் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார். தமிழ் மீது உண்மையான அக்கறை இருந்தால், மோடியை மேடையில் வைத்துக்கொண்டு இது 'அண்ணா வழிவந்த இருமொழி கொள்கை மாநிலம்' என்று பேசும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? எனச் சவால் விடுத்தார்.
மகளிர் உரிமைத் தொகை குறித்து கலகலப்பாகப் பேசிய அவர் இல்லத்தரசிகள் இந்தத் திட்டத்தின் மூலம் உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் கணவரிடம் கேட்கத் தேவையில்லை. ஒருவேளை யாராவது கணவன் முறைத்தால், உங்கள் அண்ணனிடம் (ஸ்டாலின்) சொல்லிவிடுவேன் என்று கூறுங்கள் எனத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்களான கீரனூர் முத்து மற்றும் விராலிமலை சண்முகம் ஆகிய இரு மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தைத் தற்போதைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
"இது யாருக்கான தேர்தல்? தமிழ்நாடா அல்லது டெல்லியா? மக்களாட்சியா அல்லது சர்வாதிகாரமா? என்பதை ஏப்ரல் 23-ஆம் தேதி மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் நிரூபிப்பார்கள்" என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினை புதைக்கலாம்.. என் திட்டங்களை முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!