BJP-க்கு பக்கா ஜால்ரா அதிமுக.. கூஜா தூக்க ரெடி ஆகிட்டாங்க.. திமுக கடும் விமர்சனம்!
தமிழர்களை பிரிவினைவாதிகள் எனக் கூறும் முழு சங்கியாக அதிமுக மாறிவிட்டது என திமுக குற்றம் சாட்டி உள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழர் நாகரீகத்தையும் ஆரிய நாகரிகத்தையும் ஒன்று என அதிமுகவினர் கூறி வருவதாக திமுக சாட்டியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் காணொளியை பகிர்ந்துள்ள திமுக தொழில்நுட்ப அணி, அதிமுகவை கடுமையாக விமர்சித்து உள்ளது.
இது தொடர்பான பதிவில், தமிழர்களை பிரிவினைவாதிகள் என்று கூறும் முழு சங்கியாக அதிமுக மாறியுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆரிய நாகரிகத்தையும் தமிழர் நாகரிகத்தையும் ஒன்று என உளறும் அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் போன்றோர்கள் தமிழர் நாகரிகத்தின் சான்றான கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய பாஜக அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் அளவிற்கு பாஜகவுக்கு கூஜா தூக்க அதிமுகவினர் தயாராகிவிட்டனர்.
இதையும் படிங்க: இளைஞர் தற்கொலையில் பெரும் சந்தேகம்! திமுக அடக்குமுறைக்கு போலீஸ் பணிய கூடாது - நயினார்
பாரத நாகரிகம் என இல்லாத ஒரு நாகரிகத்துடன் தமிழர்களின் தொன்மையை ஒப்பிட்டு பார்ப்பதில் பெரிய சூழ்ச்சி உள்ளது. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவும் ஜால்ரா போடுகிறது. தமிழர் விரோத செயல்களை செய்யும் இந்த ரெண்டு கட்சிகளையும் மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!