×
 

எதிர்க்கட்சியினரை ஆத்திரமூட்டும் அமைச்சர்கள்..! முதல்வர் ரசிப்பது மகா கேவலம்..! ஐ.லியோனி கண்டனம்.!

அவையில் நடக்கும் மோதல்களை முதல்வர் விஜய் ரசிப்பது மகா கேவலம் என லியோனி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் எதிர்க்கட்சியான திமுகவினருக்கும் இடையே தொடர்ந்து காரசாரமான விவாதங்களும் மோதல் போக்கும் நிலவி வருகின்றன. 2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து அரசாங்கத்தை அமைத்த பின்னர், திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த நிலையில் பேரவை நடைமுறைகள் பெரும்பாலும் இரு தரப்புக்கும் இடையிலான கடும் வாக்குவாதங்களால் நிரம்பியுள்ளன. 

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து தங்கள் அரசின் திட்டங்களை மக்களுக்கு சொல்லுவது ஒரு அரசுக்கு, அமைச்சர்களுக்கு, மக்களுக்கு முக்கியமான நிகழ்வு என்று திமுக பேச்சாளர் ஐ. லியோனி தெரிவித்து உள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எதிர்க்கட்சியினர் கொண்டுவருகையில் சட்டத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் இருவரும் ஆத்திரமூட்டும் கருத்துகளை தேவையின்றி தெரிவிப்பதும், எதிர்க்கட்சியினர் கொந்தளித்து எழுவதும், பேரவை தலைவர் சிக்கித் தவிப்பதும்,  அவை முன்னவர் ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவதும் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் புத்திமதி சொல்லுவதும் தொடர் வாடிக்கையாகி மக்களுக்கு சலிப்பையும்,வெறுப்பையும் உண்டாக்குகின்றன என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சிங்கம்யா"..! இளைய கலைஞர் உதயநிதி..! புகழ்ந்து தள்ளிய எம்எல்ஏ ஆஸ்டின்..!

இதை முதல்வர் விஜய் ரசிப்பது மகா கேவலம் என்று விமர்சித்து உள்ளார் எதிர்க்கட்சியினரின் ஆக்கப்பூர்வமான யோசனைகளைப் பெற்று சரியான வழியில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் தவெக வரும் தேர்தலில், 1996ல் அதிமுகவைப் போல் படுதோல்வியை சந்திக்கும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share