எடப்பாடி பழனிசாமியால் அண்ணாவுக்கு அவமானம்... பாஜகவுக்கு அதிமுக அடிமையானதாக அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் திருப்பணி செய்திருக்கின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சி
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை இருக்கக்கூடாது என்று கூறும் பைத்தியக்காரத்தனத்தை போல் வேறு எதுவும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை என்று ஒன்று இருப்பதால்தான் இன்று ஆலயங்கள் சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது. எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் திருப்பணி செய்திருக்கின்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி எங்களது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சி” எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முருகன் மாநாட்டில் பங்கேற்றது வெட்கக்கேடான விஷயம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர். திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லித்தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அதிமுகவின் கட்சி பெயரிலேயே திராவிடம் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்தில் இருப்பதால் மறந்துவிட்டார். மற்றவர்களும் மறந்துவிட்டு பாஜகவின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிடைத்துள்ள அருமையான அடிமைகள் அவர்கள் என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!
வந்திருக்கின்ற மக்களை அரசியலுக்காக இழுக்க வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் துணிச்சலோடு செய்யக்கூடிய தைரியம் ஒன்றிய அரசு தங்கள் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் இதுபோன்று செயல்பட்டுள்ளனர். நீதித்துறை இன்று இந்தியாவில் சுதந்திரத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பல சம்பவங்கள் சுட்டிக்காட்டி உள்ளது. இதிலும் நீதித்துறை நடுநிலைமையோடு செயல்பட்டு யார் யார் எல்லாம் அரசியல் தீர்மானங்கள் கொண்டு வந்தார்களோ அவர்கள் மீது தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதித்துறை எடுக்கும் எனக்கூறினார்.
தேர்தலின் போது அவர் அவர்கள் கோரிக்கையை சொல்வது இயற்கை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்று கூறிவிட்டு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்கும் போது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறியது அடிபட்டுவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் தான் மக்களை சந்திக்க முடியும். கூடுதல் இடம் வாங்கி மக்களை சந்திக்க வேண்டும் என்று கூறினால் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் தான் அவர்கள் கூடுதல் சீட்டு கேட்க வருகிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: அண்ணா பெயரை பயன்படுத்தவே அதிமுகவுக்கு தகுதியில்லை... அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பு!