×
 

"எவ்ளோ நாள் தான் சேகர்பாபுவே"..? உளறிக் கொட்டிய திமுக MLA..! மைக்கை பார்த்ததும் செம்ம ஷாக்..!!

முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை திமுக எம்எல்ஏ விமர்சித்து உளறி கொட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான சேகர் பாபுவை மையப்படுத்தி நடந்த இந்த நிகழ்வு, கட்சிக்குள்ளேயே நிலவும் பதற்றத்தையும் உள்மோதலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அருகே சேகர் பாபு நிற்க முயன்றபோது, திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் அவரை ஒதுக்கியதுடன், “இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் சேகர் பாபு?” என்று பேசிவிட்டார். அந்தப் பேச்சு மைக்கில் பதிவாகி வெளியேறிவிட்டதால், அங்கிருந்தவர்களும் பின்னர் அதைப் பார்த்தவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

சேகர் பாபு ஒரு காலத்தில் திமுகவின் முக்கியப் புள்ளியாக இருந்தவர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றியபோது கோயில் சொத்துகளை மீட்பது, கும்பாபிஷேகங்கள் நடத்துவது போன்ற செயல்களால் கவனம் பெற்றார். வடசென்னைப் பகுதியில் அவரது செல்வாக்கு வலுவாக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்த பிறகு நிலைமை மாறியது.

இதையும் படிங்க: "வறட்சி எங்கே?.. புகழ்ச்சி மட்டுமே!" டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லை என மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியடைந்தபோது, சிலர் சேகர் பாபுவைக் குற்றம் சாட்டினர். அதன் பிறகு கட்சியில் அவரது செல்வாக்கு குறைந்ததாகவும், ஓரங்கட்டப்படத் தொடங்கியதாகவும் பேச்சுகள் எழுந்தன. சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பை மாற்றும் திட்டம் குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்ததாகச் செய்திகள் வந்தன.இப்போது நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பேச்சுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 

இதையும் படிங்க: Ex. அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்..!! ஆபாசமாக பேசிய வழக்கில் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share