இருட்டில் மூழ்கடிக்கும் திமுக அரசு... கல்லா கட்ட இது ஒரு வழியா?.. நயினார் கண்டனம்..!
மின்சார கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கமிஷன் கல்லா கட்ட தனியாரிடம் மின் கொள்முதல் செய்யும் இருண்ட மாடல் திமுக அரசு, விடியல் அரசு எனக் கூற வெட்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக ஒரு மெகாவாட் கூட மின் உற்பத்தி செய்யப்படவில்லை என நயினார் தெரிவித்து உள்ளார்.
உப்பூர், எண்ணூர், கொல்லிமலை மற்றும் குந்தா நீர் மின் நிலையங்களில் கட்டுமானப் பணிகளே முடங்கி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானப் பணிகள் முடிந்த வட சென்னை மற்றும் உடன்குடி மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கப்படவில்லை என்றும் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மின்சாரக் கொள்முதல் செலவு 60% உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அதிலும், 2024-ல் மட்டும் 28 ஆயிரத்து 772 கோடி ரூபாய்க்குத் தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்திருப்பது, கமிஷன் கல்லா கட்ட தான் திமுக அரசு மின் உற்பத்தியை முடக்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு மஞ்சள் கிழங்கையும் சேர்த்து குடுங்க... முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்...!
இதே திமுக அரசுதான் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைக் குறைத்து, 20,000 மெகாவாட் மாசற்ற மின் உற்பத்தி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் எண் 231-ல் திமுக கூறியது என்றும் அவர் தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதியை மறந்து, கஜானாவை வழித்தெடுத்து, மின் உற்பத்தியைக் கிடப்பில் போட்டு, கமிஷன் கல்லா கட்ட தனியாரிடம் மின் கொள்முதல் செய்யும் இருண்ட மாடல் திமுக அரசு, விடியல் அரசு எனக் கூற வெட்கப்பட வேண்டும் என்று சாடினார்.
இதையும் படிங்க: உங்க அரசியல் வாழ்க்கைக்கு நீங்களே முடிவுரை எழுதுறிங்க EPS… எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!