பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!
இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் இறுதி பட்டியல் சட்டமன்ற தேர்தலையே புரட்டிப்போடக்கூடிய மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி, அதிமுக + பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழக தேர்தல் களம் இப்போதே கனலாய் தகிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக 4 கட்சிகளும் வாக்குறுதிகளை வாரி வீசி வரும் நிலையில், இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் இறுதி பட்டியல் சட்டமன்ற தேர்தலையே புரட்டிப்போடக்கூடிய மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 ஆகவும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 7,617 ஆகவும் உள்ளது. அதாவது ஆண் வேட்பாளர்களை விட பெண் வேட்பாளர்களே அதிகமுள்ளனர்.
எனவே இந்த தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்த போவது பெண் வாக்காளர்கள் தான். இனி வரும் நாட்களில் பெண்களை குறி வைத்து அரசியல் கட்சியினர் பல வாக்குறுதிகளை அள்ளிவீச போகின்றனர் எனக்கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளும் திமுக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்காக ரூ.3000 மற்றும் கோடை கால சிறப்பு தொகையாக ரூ.2000 என மொத்தமாக மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் கணக்குகளில் 5000 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகை 1000 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!
மற்றொருபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ குலவிளக்கு என்ற திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.2000 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள மாநாடு ஒன்றில் மகளிருக்கு ரூ.10000 என்ற பீகார் பார்முலா திட்டத்தை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் முந்திக்கொண்ட முதலைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் சுய உதவிகுழு கடன்கள் தள்ளுபடி, பெண்களுக்கு தொழில் தொடங்க சிறப்பு நிதி போன்ற அதிரடி அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு தொழில் தொடங்க சிறப்பு நிதி என்ற திட்டத்தின் கீழ் மகளிருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. மகளிர் வாக்குகளை அதிக அளவில் பெற்றால் மட்டுமே வெற்றி என்பதால், ஏற்கனவே மகளிர் தொடர்பான பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு, இந்த தேர்தல் வாக்குறுதிக்காக புதிதாக என்னென்ன திட்டங்களை அறிவிக்கலாம் என தீவிரமாக யோசித்து வருகிறதாம்.
இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணி... சொத்து விவரத்தை வெளியிட தயாரா? விஜய் கேள்வி..!!