×
 

விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

தேர்தல் வந்தால் தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி பாசம் வருவதாக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்தார்.

தேர்தல் வந்தால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருவார் என்ற விமர்சனத்தை திமுகவினர் எப்போதும் முன் வைப்பது உண்டு. தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியின் வருகை என்பது பேசு பொருளாக மாறி வருகிறது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் வந்தால் பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீது டன் கணக்கில் வாசம் வந்துவிடும் என்றும் அதுவும் திருச்சியில் விவசாய பாசத்தை கொஞ்சம் ஓவராகவே காண்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினார்.

இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடப்பதாக தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். விவசாயிகளுக்காக பிரதமர் மோடி என்ன செய்தார் என்ற கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி கூட்டத்தில் விவசாயிகளை நண்பன் போல் பிரதமர் மோடி கபட நாடகம் போட்டு இருப்பதாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: “விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்” - தவெகவிற்கு சம்மட்டி அடி... ஒரே போடாய் போட்ட ரகுபதி...!

மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்ததாகவும் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க விவசாய பொருட்களை இந்திய சந்தையில் விற்க ஒப்புதல் அளித்து இந்திய விவசாயத்தையே சவக்குழியில் தள்ளியதாக தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்காக ஒட்டுமொத்த நாடும் தத்தளித்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share