×
 

“இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

கரூரில் முதலமைச்சர் விஜய் பேசியது இறுமாப்பின் ஆணவத்தின் அகந்தையின் எடுத்துக்காட்டு.

பழனியில் நடைபெற்ற பத்திர மோசடிக்கு விஜய் அரசு உடந்த இல்லையா? தூய ஆட்சி தூய்மையானவர்களுக்கான ஆட்சி எல்லோருக்கும் நல்லது செய்கின்ற ஆட்சி இல்லை மொத்தமாக சுருட்டுகின்ற ஆட்சியாக தவெக அரசின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஊழலுக்கு எடுத்துக்காட்டாக ஊழல் மகாசக்தியாக ஊழல் பராசக்தியாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் அரசு இருப்பதற்கு பழனியும் கரூரும் எடுத்துக்காட்டு. 

எங்கு போனாலும் தவெகவினர் குட்கா விற்கின்றனர். திருமயம் தொகுதியைப் பொறுத்தவரை தவெகவில் உள்ள பலர் மணல் கடத்துகின்றனர் ஆனால் இது குறித்த அதிகாரிகளிடம் கேட்டால் மேலிடத்தில் எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறுகின்றனர். இந்த மேலிடம் யார் லஞ்சம் வாங்காத விஜய் சார் அந்த மேலிடம் யார் சிறுவர்களை ஏமாற்றி வாக்கு வாங்கிய விஜய் சார் அந்த மேலிடம் யார் என்பதை சொல்ல வேண்டும். 

ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆறாவது நிமிடம் விஜய் பேசி இருந்தால் அவரை போட்டிருப்பார்கள். ஐந்து நிமிடம் எழுதி வைத்ததை படித்துவிட்டு சென்றார். ஐந்து நிமிடம் மட்டும் பேசி புத்திசாலித்தனமாக தப்பித்து வந்துவிட்டார். ஆறாவது நிமிடம் நீங்கள் பேசி அவரது நாற்றம் தெரிந்திருக்கும் அவ்வாறு அவர் இருந்தால் இவருக்காக நாம் ஓட்டு போட வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் எல்லாம் ஓடிப் போய் இருப்பார்கள் ஐந்து நிமிடத்தை தாண்டி ஆறாவது நிமிடம் விஜய் பேசி இருந்தால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இன்று மு க ஸ்டாலின் இருந்திருப்பார்.

இதையும் படிங்க: நிர்மல்குமார் உத்தமபுத்திரனா?... தவெகவுக்கு முட்டுக்கொடுத்ததே திமுக தான்... அடித்து நொறுக்கிய ரகுபதி...!

மக்கள் எப்படி தானாகவே நீங்கள் கேட்காமல் ஓட்டு போட்டார்களோ அதேபோல் இந்தியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். கரூரில் விஜய் எங்க மகன் எங்க அண்ணன் எங்க விஜயோட ஆட்சி அதனால் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று கூறுங்கள் என்று தெரிவித்தார் அதை சொன்னதற்கு தான் நாகர்கோவிலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்ணனாச்சி தம்பி ஆட்சி என்று சொல்வதால் உயிரிழந்து தான் போகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திருமயம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ் ரகுபதி கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி பேசுகையில்: பழனி கோயிலுக்கு சொந்தமான இடங்கள் விற்கப்பட்டு பின்னர் உயர் நீதிமன்றத்தால் ரத்து பட்டபோதும் கரூரில்  ஒரே நாளில் 3508 ஏக்கர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டதும் லஞ்சம் வாங்காத உத்தமர் முதலமைச்சர் விஜய் சாரின் ஆட்சியின் லட்சணத்திற்கு எடுத்துக்காட்டு. 

ஒரு ஆட்சியின் பங்களிப்பு இல்லாமல் இந்த தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. பழனியை பொறுத்தவரை துணை ஆணையராக இருக்கக்கூடியவர் நில பதிவு செய்யக்கூடாது என்பதை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து தடுத்துக் கொண்டே இருக்கிறார். அதே நேரத்தில் பத்திரப்பதிவு சார் பதிவாளரும் தடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் மறுத்த நிலையில் அவர்களை விடுமுறையில் செல்ல சொல்லிவிட்டு அடுத்த நாளில் அங்கிருக்க கூடிய துணை ஆணையருக்கு இணை ஆணையர் பதவி கொடுத்து அந்த பதவியில் உடனடியாக சேர சொல்லி அதற்கான பணிகளை பார்க்க சொல்லிவிட்டு இரண்டு பேரையும் தடுத்துவிட்டு புதிதாக ஒருவரை அவர்களுக்கு சாதகமானவரை வரவழைத்து இந்த பத்திர மோசடி நடந்திருக்கிறது. இதற்கு விஜயின் அரசு உடந்தையா இல்லையா?

லஞ்சம் கேட்டால் முதலமைச்சர் விஜய் இடம் சொல்லுங்கள் என்று எந்த முதலமைச்சரும் சொல்லாததை இவர்தான் சொல்லிக் கொண்டிருப்பதை போல் சொல்கிறார். அப்படி என்றால் அவரிடமே லஞ்சம் கொடுக்க சொல்கிறாரா என்று தெரியவில்லை. கரூரில் நடந்ததற்கும் பழனியில் நடந்ததற்கும் யார் காரணம் என்று தெரியவில்லை. பழனிக்கு சிபிசிஐடி விசாரணை வைத்திருக்கிறார்கள். 

கரூரைப் பொருத்தவரை எம் ஆர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைகிறார். அவரது நிபந்தனை எங்களுக்கு கிடைத்த தகவலின் படி  விஜயபாஸ்கர் வினாமிகளுக்கு சொந்தமான இடங்கள் 200 ஏக்கருக்கு மேல் உள்ளது அனைத்துமே விலை உயர்ந்த இடங்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரே நாளில் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெறாமல் அந்த நிலங்கள் அனைத்தையும் கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அந்த இடத்தினுடைய பட்டியலை கோயிலுக்கு சொந்தம் இல்லை என்று யாராவது வெளியிட உத்தமர் விஜய் லட்சியவன் தூய சக்தி அவருடைய அரசு வெளியிட தயாரா? 

அங்கிருக்க கூடிய நிலங்கள் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமானவை என்பதை வாங்கி இருக்கக் கூடிய பதிவுகளில் இருந்து தெரியும். ரயத்துவாரி பட்டாவிலும் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதனால்தான் அங்கு நிலங்கள் விற்கப்படக்கூடாது. தனியார் நிலங்கள் விற்க யாரும் தடை கிடையாது ஆனால் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை எப்படி விற்க முடியும். 

3500 ஏக்கர் நிலங்கள் இன்று பறிபோகிறது என்று சொன்னால் இது தூய ஆட்சி தூய்மையானவர்களுக்கான ஆட்சி எல்லோருக்கும் நல்லது செய்கின்ற ஆட்சி இல்லை மொத்தமாக சுருட்டுகின்ற ஆட்சியாக தவெக அரசின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பழனியும் கரூம் உதாரணமாக இருக்கிறது.

நாகர்கோவிலில் கிளை சிறையில் குட்கா விற்பனையில் ஈடுபடுகிறார் என்பதற்காக கைது செய்யப்படுகிறார். இறந்தவர் சொல்லி இருக்கிறார் 25000 உத்தமர் விஜய் ஆட்சியில் லஞ்சம் கேட்கிறார்கள் நான் தர மறுத்ததால் என் மீது வழக்கு போட்டதாக தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகுதான் என்னை அழைத்து அடித்து உதைத்தார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. 

யார் யாரெல்லாம் அங்கு அடித்தார்கள் என்று சொன்னார்களோ அவர்களை காப்பாற்றுவதற்கு அமைச்சர் ஒருவர் முயற்சி செய்தார் என்ற செய்தி சில நாளிதழில் வந்துள்ளது. இதுதான் நேர்மையான ஆட்சியா? தமிழ்நாட்டு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை, விவசாயிகளுக்கு நிவாரணம் தருகிறோம் விவசாய பொருள் தருகிறோம் என்று சொல்லிவிட்டு 318 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக கூறினார்கள் எதுவுமே வாங்க முடியாது. காவிரியில் தண்ணி வந்தால் தான் டெல்டா விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். இந்த ஆட்சியில் நடப்பது எல்லாம் மக்களுக்கு எதிரான செயல்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது.

எங்கு போனாலும் தவெகவினர் குட்கா விற்கின்றனர். திருமயம் தொகுதியைப் பொறுத்தவரை தவெகவில் உள்ள பலர் மணல் கடத்துகின்றனர் எங்கு வேண்டுமென்றாலும் சென்று பார்க்கலாம். பரளி குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கூட பார்க்கலாம். ஆனால் இது குறித்த அதிகாரிகளிடம் கேட்டால் மேலிடத்தில் எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறுகின்றனர். 

இந்த மேலிடம் யார் லஞ்சம் வாங்காத விஜய் சார் அந்த மேலிடம் யார் சிறுவர்களை ஏமாற்றி வாக்கு வாங்கிய விஜய் சார் அந்த மேலிடம் யார் என்பதை சொல்ல வேண்டும். 

தவெக அரசில் பல்வேறு தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சர்களுக்கு என்ன இலக்கா என்ன பணி என்று புரிந்து கொள்ளாமல் அவரவர்கள் ஒரு பாணியில் திரிந்து வருகின்றனர். 

அரசு நிகழ்ச்சியில் யாரும் இல்லை என்றால் தவெகவினர் முன் நின்று அந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். எங்கள் ஆட்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியில் தான் எங்கள் கட்சியினர் பங்கேற்பார்கள். அமைச்சர்கள் பங்கு பெறவில்லை சட்டமன்ற உறுப்பினர் பங்கு பெறவில்லை என்றால் கட்சியினர் பங்கு பெற மாட்டார்கள். நாங்கள் விதிமுறைகளை கடைபிடித்தோம் ஆனால் தற்போது யாரும் அந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை யார் யாருக்கு உத்தரவு போடுகிறார்கள் என்பதே தெரியவில்லை. இப்படிப்பட்ட அவல நிலை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: த.வெ.க. அமைச்சரவை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதல்... கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share