30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!
திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி 30-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தியின் அரசியல் பயணம் மார்க்சிஸ்ட் பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடங்கியது. பின்னர் 2009-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், அதன் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ப. சிதம்பரத்துக்கு எதிராகவும், 2016 சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டும் அனுபவம் பெற்றார்.
ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் தமிழ் புலம்பெயர்ந்தோர் சார்பில் உரையாற்றியதும் அவரது குறிப்பிடத்தக்க செயல்பாடுகளில் ஒன்று.2021-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
திமுக மாணவரணியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. 2022 நவம்பர் மாதம் திமுக மாணவரணி தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2025-ஆம் ஆண்டு மாணவரணி மாநிலச் செயலாளராக உயர்த்தப்பட்டார். இந்தப் பொறுப்பில் சுமார் ஒரு ஆண்டு பணியாற்றினார்.
இதையும் படிங்க: மீண்டும் ஊதிய உயர்வு... கவுரவ விரிவுரையாளர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்... அமைச்சர் கொடுத்த அப்டேட்..!
சுமார் ஒரு ஆண்டு கழித்து திடீரென அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார். இந்த மாற்றம் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பதவி மாற்றத்திற்குப் பின்னணியில் பாலியல் தொடர்பான புகார்கள் இருப்பதாக சில சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படுகிறது. சில இடங்களில் 35 பெண்கள் கட்சியில் புகார் அளித்ததால் கண்துடைப்பாக பதவி மாற்றம் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. ராஜீவ்காந்தி மீது பாலியல் துன்புறுத்தல், மானபங்கம் போன்ற புகார்கள் இருந்ததாகவும், அதனால் கட்சி நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!