×
 

கொலை இல்லங்க... உலோகவியல் சோதனை..!! முட்டுக்கொடுக்கும் திமுக... விளாசிய தவெக..!!

தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி திமுக மீது விமர்சனங்களை தமிழக வெற்றி கழகம் முன் வைத்துள்ளது.

கொலை என்ற சொல்லாமல் அதனை உலோகவியல் சோதனை என்று திமுக கதைக்கட்டும் என தமிழக வெற்றிக்கழகம் விமர்சனம் செய்துள்ளது. பட்டப்பகலில் அரிவாளால் வெட்டுவதை 'கொலை முயற்சி' என்று சொல்லக் கூடாது. அது ஒரு 'உலோகவியல் பரிசோதனை' என்று சொல்வார்கள் எனவும் இரும்பும் மனிதத் தசையும் எவ்வளவு வேகத்தில் மோதுகிறது என்று இளைஞர்கள் செய்யும் நேரடிச் செய்முறை விளக்கம் உயரதிகாரி கண்டுபிடிப்பு என்றும் தெரிவித்துள்ளது 

"ரவுடிகள் மாமூல் கேட்பதை 'மிரட்டல்' என்று சொல்லக் கூடாது., அது ஒரு 'தன்னார்வ வரி வசூல் முறை' என்றும் வணிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான 'பரஸ்பர அன்புப் பரிமாற்றம்' என மூத்த உடன்பிறப்புகள் கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. "கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை 'சட்டவிரோதம்' என்று சொல்லக் கூடாது என்றும் இது இளைஞர்களை 'ஆன்மீக நிலைக்கு' அல்லது 'கற்பனை உலகிற்கு' அழைத்துச் செல்லும் 'மனநல ஊக்க மருந்து' என்றும் இதை விற்பவர்கள் 'மகிழ்ச்சி விநியோகஸ்தர்கள்' என நவீன நடுநிலையாளர்கள் கூறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

"விசாரணைக் கைதி உயிரிழப்பதைக் 'கொலை' என்று சொல்லக் கூடாது., அது 'நிர்வாக ரீதியான இயற்கை மரணம்'. லத்தியும் முதுகும் முத்தமிட்டுக் கொண்டதில் ஏற்பட்ட 'உணர்ச்சிப் பெருக்கால்' வந்த மூச்சுத்திணறல் என வாடகை வாய்கள் கூறும் என்ற விமர்சனம் செய்துள்ளது. "வீடு புகுந்து கொள்ளையடிப்பதை 'திருட்டு' என்று சொல்லக் கூடாது என்றும் அது ஒரு 'செல்வப் பகிர்வுத் திட்டம்' என்றும் செல்வந்தர்களிடம் இருக்கும் உபரிப் பொருட்களைத் தேவையுள்ளவர்கள் எடுத்துச் செல்லும் 'சமதர்மப் புரட்சி' என்பார்கள் என்று விமர்சித்துள்ளது.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தை முதல் பல்விழுந்த பாட்டி வரை...!! ராட்சசன் ஸ்டாலின்... பாஜக விமர்சனம்..!!

விலைவாசி உயர்ந்துவிட்டது என்று சொல்வது தவறு. இது மக்களின் வாங்கும் திறனைச் சோதிக்கும் 'பொருளாதார உடற்பயிற்சி'. விலை ஏறவில்லை, ரூபாயின் மதிப்பு 'யோகா' செய்கிறது என்றும் மின்சாரம் போய்விட்டது என்று சொல்லக் கூடாது. அது 'இருள் வழிபாட்டு நேரம்'. தொடர்ச்சியாக மின்சாரம் கொடுத்தால் கம்பிகள் சூடாகிவிடும் என்பதால், கம்பிகளுக்குக் கொடுக்கப்படும் 'சிறு ஓய்வு' என்று சொல்ல வேண்டும் என கூறுவார்கள் என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது. சாலையில் பள்ளம் இருக்கிறது என்று சொல்வது அவதூறு. அவை மழைநீரைச் சேமிக்க இயற்கை கொடுத்த 'மினி ஏரிகள்' என்றும் வாகன ஓட்டிகள் நிதானமாகச் செல்ல அரசு ஏற்படுத்திய 'இயற்கை வேகத்தடைகள்' என்றும் வேலையில்லா திண்டாட்டம் என்று சொல்லக் கூடாது., இளைஞர்கள் அனைவரும் 'சுயசிந்தனை நிபுணர்களாக' மாறிவிட்டார்கள். வேலை தேடாதது சோம்பேறித்தனம் அல்ல, அது 'உழைப்பு சேமிப்புத் திட்டம்' என்று கூறுவார்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளது. 

இதையும் படிங்க: அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share